

இந்திய குடியரசு தின விழா மற்றும் காந்தியின் 150-வது பிறந்த நாள் விழா அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 26-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா கலந்து கொள்கிறார். அர்ஜென்டினாவில் நடந்து வரும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்றுள்ள நரேந்திர மோடி தென்ஆப்பிரிக்க அதிபரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.