ஆசிய விளையாட்டு போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்கள் பெற்ற இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். #AsianGames2018 #PMModi
ஆசிய விளையாட்டு போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Published on

புதுடெல்லி:

இந்தோனேஷியாவில் இரண்டு வார காலமாக நடைபெற்ற 18-வது ஆசிய விளையாட்டு திருவிழா நேற்று நிறைவடைந்தது.

இந்த ஆசிய விளையாட்டில் 572 வீரர், வீராங்கனைகள் கொண்ட இந்திய அணி பங்கேற்றது. 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் என்று மொத்தம் 69 பதக்கங்களை இந்தியா குவித்து பதக்கப்பட்டியலில் 8-வது இடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்கள் பெற்ற இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், இந்திய வீர்ர்  வீராங்கனைகளுக்கு மீண்டும் ஒருமுறை பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். 2018-ம் ஆண்டின் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா புதிய வரலாறை உருவாக்கியுள்ள்து. இதில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளால் இந்தியா பெருமிதம் கொள்கிறது.

போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளின் பயிற்சியாளர்கள், உதவியாளர்கள், பெற்றோர்கள், உறவினர் மற்று நண்பர்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சாம்பியன்களுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.  #AsianGames2018 #PMModi

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com