செய்திகள்
கோபியில் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
கோபியில் இன்று வேதியியல் தேர்வு நடைபெறும் நிலையில் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
கோபி:
கோபி வாய்க்கால் வீதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மகன் தினேஷ்கு மார் (வயது 18). பிளஸ்-2 படித்து வந்தார். இன்று அவருக்கு வேதியியல் தேர்வு நடக்கிறது.
கடந்த 8-8-2018 அன்று தினேஷ்குமாரின் தந்தை மரணம் அடைந்தார். இதில் தினேஷ்குமார் மனம் உடைந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு தினேஷ்குமார் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தினேஷ்குமார் எழுதிய கடிதம் சிக்கியது. அதில் ‘‘நான் ஜாலியாக இருக்க விரும்புகிறேன். தந்தை மரணம் என்னை வேதனையடைய செய்தது’’ என்று அவர் எழுதி உள்ளார்.

