கோட்டையூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

சிவகங்கையை அடுத்த கோட்டையூர் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கோட்டையூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
Published on

சிவகங்கை:

சிவகங்கையை அடுத்த கோட்டையூர் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் கவுஸ் முகைதீன் முன்னிலையில் நடைபெற்ற இந்த பேரணியில் பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள், பேரூராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பேரணியின்போது, தமிழகம் முழுவதும் வருகிற 1-1-19 முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது என்றும், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் வரும் தீமைகள் குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு, துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. மேலும் துணிப்பைகள் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. பின்னர் கோட்டையூரில் உள்ள தெற்கு ஊருணியில் பேரூராட்சி பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com