செல்போன் நம்பர் கேட்டு பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தவர் கைது

செல்போன் நம்பர் கேட்டு பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
செல்போன் நம்பர் கேட்டு பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தவர் கைது
Published on

மதுரை:

மதுரை ஊமச்சிக்குளம் பால்பண்ணை காலனியைச் சேர்ந்த புஷ்பராஜ் மனைவி நாகஜோதி (வயது 21). இவர் நேற்று காலை வாடிப்பட்டிக்கு சென்றார்.

அப்போது நாகஜோதியை வாலிபர் ஒருவர் பின் தொடர்ந்து சென்றார். நீ மிகவும் அழகாய் இருக்கிறாய், உன் செல்போன் நம்பர் கொடு என்று வற்புறுத்தி உள்ளார்.

இதற்கு நாகஜோதி மறுக்கவே, வாலிபர் சம்பவ இடத்தில் வழிமறித்து பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். இது தொடர்பாக நாகஜோதி வாடிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். சப்- இன்ஸ்பெக்டர் சேவை ராமச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து நாகஜோதிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த வாலிபரை பிடித்து விசாரித்தார்.

விசாரணையில் அவர் வாடிப்பட்டி அருகில் உள்ள செம்புக்குடிப்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (27) என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து வாடிப்பட்டி போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com