உத்திரமேரூர் அருகே பெரியார் சிலை உடைப்பு

உத்திரமேரூர் அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் போராட்டம் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
உடைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை
உடைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை
Published on

பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து சர்ச்சையாக வெடித்து உள்ளது. ரஜினிக்கு எதிராக பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ரஜினியின் வீட்டை முற்றுகையிடும் போராட்டமும் நீடித்து வருகிறதது.

இந்த நிலையில் உத்திரமேரூர் அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்திரமேரூரை அடுத்த சாலவாக்கம், களியப்பட்டியில் பெரியார் சிலை உள்ளது. நேற்று இரவு வந்த மர்ம கும்பல் பெரியார் சிலையை உடைத்து சேதப்படுத்தி சென்று விட்டனர்.

இன்று காலை பெரியார் சிலை உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி சாலவாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com