திருச்செங்கோடு நகராட்சி குப்பை கிடங்கை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்

திருச்செங்கோடு நகராட்சி குப்பை கிடங்கை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் வாக்களிப்பை புறக்கணித்து இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்செங்கோடு நகராட்சி குப்பை கிடங்கை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்
Published on

திருச்செங்கோடு:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அணிமூர் கிராமத்தில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது.

இந்த குப்பை கிடங்கை சுற்றி ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த நிலையில் குப்பை கிடங்கில் கொட்டப்படும் கழிவுகள் மூலமாக பல்வேறு நோய்கள் பரவுவதாகவும், எனவே, குப்பை கிடங்கை அகற்ற வேண்டும் எனவும் அந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அப்பகுதி மக்கள் வாக்களிப்பை புறக்கணித்து இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த வருவாய் கோட்டாட்சியர் மணிராஜ், அணிமூர் கிராமத்திற்கு சென்று அவர்களிடம் சுமூக பேச்சுவார்த்தை நடத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com