

பழவேற்காடு பகுதியில் சிலர் மணல் கடத்தி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பழவேற்காடு கூனங்குப்பம் சவுக்கு தோப்பு பகுதியில் சிலர் டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர்.
போலீசார் அருகில் செல்வதற்குள், மணல் அள்ளிய 2 பேர் டிராக்டரை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். அந்த டிராக்டரை திருப்பாலை வனம் போலீசார் பறிமுதல் செய்தனர்.