காஞ்சிபுரத்தில் பட்டு சேலைகள் விற்பனை களை கட்டியது

காஞ்சிபுரத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு பட்டு சேலை வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பட்டு சேலைகள்
பட்டு சேலைகள்
Published on

காஞ்சிபுரம்:

கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக பட்டு நகரம் என பிரசித்திபெற்ற காஞ்சிபுரத்தில் பட்டு சேலை வியாபாரம் முடங்கியது. இதனால் வியாபாரிகளும், நெசவாளர்களும் அவதிப்பட்டு வந்தனர். ஊரடங்கு உத்தரவு தளர்வுகளால் பட்டுசேலை விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கங்கள், தனியார் நிறுவனங்கள் திறக்கப்பட்டு பட்டு சேலை வியாபாரம் குறைந்த அளவில் நடைபெற்று வந்தது.

புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் பிறந்துள்ள நிலையில் முகூர்த்த நாளான நேற்று காஞ்சிபுரம் நகரிலுள்ள பட்டுசேலை விற்பனை கடைகளிலும், பட்டு கூட்டுறவு சங்கங்களிலும், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பட்டு சேலையை வாங்க காஞ்சிபுரத்தில் குவிந்தனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு பட்டு சேலை வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பட்டு சேலை விற்பனை களை கட்டினாலும், பட்டு சேலை வாங்க வெளியூர்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் வருபவர்கள் தங்கள் வாகனங்களை சாலை ஓரங்களில் நிறுத்தி உள்ளதால் காஞ்சிபுரம் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com