கட்சியின் வெற்றிக்காக மு.க. அழகிரியை சந்திப்பேன் - சு.வெங்கடேசன்

கட்சியின் வெற்றிக்காக மு.க. அழகிரியை சந்தித்து ஆதரவு கேட்பேன் என்று சு.வெங்கடேசன் கூறினார். #Parliamentelection #DMK #MKAzhagiri
கட்சியின் வெற்றிக்காக மு.க. அழகிரியை சந்திப்பேன் - சு.வெங்கடேசன்
Published on

மேலூர்:

தி.மு.க. கூட்டணி சார்பில் மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் சு.வெங்கடேசன் இன்று மேலூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாநிலத்திலேயே மதுரை மாவட்டம் விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது. இதனை மாற்ற பாடுபடுவேன்.

அதேபோல் மேலூர் பகுதி விவசாயம் நிறைந்த பகுதியாக உள்ள நிலையில் தற்போது விவசாயம் மிகவும் பாதித்துள்ளது. இதனை மாற்றி விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரவும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவும் வெற்றி பெற்றவுடன் பாடுபடுவேன்.

இரண்டொரு நாட்களில் கட்சியின் வெற்றிக்காக மு.க.அழகிரியை சந்திக்க உள்ளேன்.

அழகிரி மட்டுமல்ல, மதுரை பாராளுமன்ற தொகுதியிலுள்ள 15 லட்சம் வாக்காளர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டவுள்ளேன்.

தொழில் வளர்ச்சியில் மதுரை முன்னேற்றமடையும் வகையில் தேர்தல் அறிக்கை விரைவில் தயார் செய்யப்பட்டு பிரசாரத்தில் ஈடுபடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார். #Parliamentelection #DMK #MKAzhagiri

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com