மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம்பாலை ஆதரித்து அன்புமணி பிரசாரம்

மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம்பாலை ஆதரித்து அன்புமணி பிரசாரம் செய்கிறார். #LokSabhaElections2019 #PMK
மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம்பாலை ஆதரித்து அன்புமணி பிரசாரம்
Published on

வில்லிவாக்கம்:

மத்திய சென்னை தொகுதி பா.ம.க. வேட்பாளர் முனைவர் சாம்பாலை ஆதரித்து பா.ம.க.இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அண்ணா நகர் தொகுதி சூளைமேடு, அண்ணாநகர் சாந்திகாலனி போன்ற பகுதிகளில் திறந்த வேனில் பொதுமக்களிடையே வாக்குசேகரித்தார், அவருடன் அமைச்சர் டி.ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் . கோகுல இந்திரா, மாணவரணி செயலாளர், எஸ்.ஆர். விஜயகுமார் எம்.பி.. மாவட்ட செயலாளர்கள். டி.நகர் சத்யா எம்.எல்.ஏ,பா.ம.க. வி.ஜே.பாண்டியன், பாரதிய ஜனதா கட்சி மா..ஜெயசங்கர், தமிழ் மாநில காங்கிரஸ், தே.மு.தி.க, உட்பட கூட்டணி கட்சி தொண்டர்கள் சென்று ஆதரவு திரட்டினார்.

அன்புமணி ராமதாஸ் பேசும்போது, நாங்கள் அமைத்துள்ள கூட்டணி மக்கள் நலனுக்கான கூட்டணி கொள்கை கூட்டணி வன்னியர் சொத்துக்களை நாங்கள் அபகரித்து உள்ளதாக ஸ்டாலின் கூறுகிறார்.

நாங்கள் சி.பி .ஐ விசாரணைக்கு தயாராக உள்ளோம்,விசாரணையின் முடிவில் நாங்கள் குற்றவாளி இல்லை என்று நிருபித்து விட்டால் ஸ்டாலின் தலைவர் பதவியை விட்டு விலக தயாரா,? நிலையான ஆட்சிக்கு ஊழலற்ற நிர்வாகத்திற்கு மாம்பழம் சின்னத்திற்கு வாக்களியுங்கள் இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #PMK

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com