

பாபநாசம்:
பாபநாசம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள தலைமை அஞ்சலகம் எதிரில் 45 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.
இது குறித்து பாபநாசம் கிராம நிர்வாக அலுவலர் அன்பரசன் கொடுத்த புகாரின்பேரில் பாபநாசம் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்குபதிவு செய்து பாபநாசம் அரசு மருத்துவ மனைக்கு உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.