பண்ருட்டி பஸ் நிலையம் அருகே அனாதையாக கிடந்த பெண் குழந்தை மீட்பு

பண்ருட்டி பஸ் நிலையம் அருகே பச்சிளம் பெண் குழந்தை அனாதையாக கிடந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பண்ருட்டி பஸ் நிலையம் அருகே அனாதையாக கிடந்த பெண் குழந்தை மீட்பு
Published on

பண்ருட்டி:

பண்ருட்டி நகராட்சி துப்பரவு பணியாளர்கள் பண்ருட்டி பஸ் நிலையம் பின்புறம் இந்திரா காந்தி சாலையில் ஜவுளிக்கடை அருகே இன்று அதிகாலை 5 மணியளவில் துப்புரவு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அங்குள்ள புதர் பகுதியில் இருந்து குழந்தை அழும் குரல் கேட்டது. உடனே அவர்கள் அங்கு சென்று பார்த்தனர்.

அங்கு பிறந்த ஒரு வாரமான அழகான பெண் குழந்தை அனாதையாக கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த செய்தி அந்த பகுதி முழுவதும் காட்டு தீ போல் பரவியது. இதைத்தொடர்ந்து கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் அங்கு வந்தனர். அனாதையாக கிடந்த பெண் குழந்தையை ஆர்வமுடன் பார்த்தனர்.

அந்த வழியாக வந்த ஆட்டோ டிரைவர் ஆறுமுகம் என்பவர் அந்த அழகிய பெண்குழந்தையை மீட்டு தனது வீட்டுக்கு கொண்டு சென்றார்.

பச்சிளம்பெண் குழந்தையை புதரில் வீசி சென்றது யார்? என்று பண்ருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com