பங்குனி உத்திர திருவிழா - சபரிமலை சென்ற இளம்பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

பங்குனி உத்திர திருவிழாவிற்காக சபரிமலை சென்ற ஆந்திராவை சேர்ந்த 2 இளம்பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். #SabarimalaTemple
பங்குனி உத்திர திருவிழா - சபரிமலை சென்ற இளம்பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்
Published on

திருவனந்தபுரம்:

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம்கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.

அதேசமயம் கேரளாவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். சபரிமலை கோவில் நடை திறக்கும் போதெல்லாம் அங்கு இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்ய செல்கிறார்கள்.

அவர்களை ஐயப்ப பக்தர்கள் தடுத்து போராட்டம் நடத்துவதால் சபரி மலையில் பரபரப்பு ஏற்படு கிறது.

தற்போது பங்குனி உத்திர திருவிழாவிற்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து சபரிமலை கோவிலுக்கு பக்தர்கள் சென்று வருகிறார்கள். நேற்று ஆந்திராவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் குழு சபரிமலைக்கு சென்றது. அந்த குழுவில் 50 வயதிற்குட்பட்ட இளம்பெண்கள் 2 பேரும் இடம்பெற்று இருந்தனர்.

இளம்பெண்கள் சபரிமலை கோவிலுக்கு செல்வதை அறிந்த ஐயப்ப பக்தர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். அவர்களுக்கு அறிவுரை கூறி திருப்பி அனுப்பினார்கள். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

சபரிமலைக்கு திரளான ஐயப்ப பக்தர்கள் சென்று வருவதால் சபரிமலையின் முக்கிய பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #SabarimalaTemple

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com