பந்தலூரில் சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது

பந்தலூர் அருகே சிறுமியை கடத்திய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

பந்தலூர்:

சேலம் மாவட்டம் ஒமலூரை சேர்ந்தவர் பூவரசன் (வயது 20). இவர் தர்மபுரியில் வேலை பார்த்த போது, அந்த பகுதியை சேர்ந்த 13 வயது பள்ளி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த சிறுமி நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து படித்து வந்தார். இந்த நிலையில் பந்தலூருக்கு வந்த வாலிபர் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி, அவரை அங்கிருந்து கடத்தி சென்றுவிட்டார். பள்ளி மாணவி மாயமானதை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து தேவாலா அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஒமலூரை சேர்ந்த பூவரசன் (வயது 20) என்பவர் ஆசை வார்த்தைக்கூறி சிறுமியை ஒமலூருக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியை மீட்டனர். மேலும் சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் பூவரசனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

இதேபோல பந்தலூர் பகுதியை சேர்ந்த ஒருவர் சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து தேவாலா அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை மற்றும் போலீசார் விரைந்து சென்று சிறுமியை மீட்டனர். இது தொடர்பாக பந்தலூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (20) என்பவரை போக்சோ சட்டத்தில்கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com