மேற்கு வங்க மாநிலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பஞ்சாயத்து தேர்தல் தொடங்கியது

மேற்கு வங்க மாநிலத்தின் பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது.#WestBengalPolls #panchayatelections
மேற்கு வங்க மாநிலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பஞ்சாயத்து தேர்தல் தொடங்கியது
Published on

கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலத்தின் பஞ்சாயத்து தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது. 58 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ள அம்மாநிலத்தின் 38,605 இடங்களில் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

621 ஜில்லா பரிஷத், 6,157 பஞ்சாயத்து சமிட்டி மற்றும் 31,827 கிராம பஞ்சாயத்துகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

அசாம், ஒடிசா, சிக்கிம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர். மேலும், 46 ஆயிரம் மாநில போலீசார், 12 ஆயிரம் கொல்கத்தா போலீசாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே 34.2 சதவீத இடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியிடாததால் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #WestBengalPolls #panchayatelections

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com