

தாம்பரம்:
சென்னையை அடுத்த குரோம்பேட்டை நியூ காலனி 2-வது மெயின் ரோட்டில் பல்லாவரம் நகராட்சி அலுவலகம் அருகே பல்லாவரம் பத்திரப்பதிவு
அலுவலகம் உள்ளது. இங்கு எந்த பணிகளாக இருந்தாலும் லஞ்சம் பெற்றுக்கொண்டுதான் பணிகளை செய்து தருவதாகவும், தரகர்கள் மூலம்
வருபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்தது வந்தது.
இந்தநிலையில் நேற்று மதியம் 2.40 மணியளவில் ஏ.டி.எஸ்.பி. லாவண்யா தலைமையில் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பல்லாவரம்
பத்திரப்பதிவு அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை குறித்து முன்னரே தகவல் அறிந்த சார்பதிவாளர் அலாவுதீன்
சுல்தான் அங்கிருந்து சென்றுவிட்டார்.
ஆனால் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினரை கண்டு அங்கிருந்து தப்பிக்க முயற்சித்த தரகர்கள் மற்றும் சில ஊழியர்களை லஞ்ச ஒழிப்பு
துறையினர் மடக்கிப்பிடித்தனர்.
மேலும் தொடர்ந்து பல மணிநேரம் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் முக்கிய ஆவணங்கள் மற்றும் பெரும் தொகை பிடிபட்டு இருப்பதாக கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்பு துறையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர்.