பல்லடத்தில் இன்று காலை அரசு பஸ் மோதி பள்ளி காவலாளி பலி

பல்லடத்தில் இன்று காலை அரசு பஸ் மோதி பள்ளி காவலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accident
பல்லடத்தில் இன்று காலை அரசு பஸ் மோதி பள்ளி காவலாளி பலி
Published on

பல்லடம்:

தேனியை சேர்ந்தவர் கணபதி ராமன் (வயது 55). பல்லடம் அருள்புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக இருந்தார். இன்று காலை பள்ளியில் இருந்து மொபட்டில் பல்லடம்- திருப்பூர் மெயின்ரோட்டுக்கு வந்தார். அப்போது அந்த வழியே வந்த அரசு பஸ் கணபதி ராமன் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com