ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் உரி பகுதியில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். #PakistanArmy #Violate
ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல்
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் அமைந்துள்ள உரி பகுதியில் பாகிஸ்தான் படையினர் இன்று அதிகாலை அத்துமீறி தாக்குதல் நடத்தினர். அவர்கள் கமால் கூட் பகுதியில் உள்ள வீடுகள் மீது கையெறி குண்டுகளை வீசினர். தாக்குதலின் சேத விவரங்கள் வெளியாகவில்லை.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை மீறி காஷ்மீரின் சம்பா மற்றும் கதுவா மாவட்டங்களில் பாகிஸ்தான் படையினர் நடத்திய அத்துமீறி தாக்குதலுக்கு நேற்று அப்பாவி பொதுமக்கள் 5 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. #PakistanArmy #Violate

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com