

இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் தற்போதைய அதிபர் மம்னூன் உசைனின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனால், செப்டம்பர் 4-ம் தேதி அதிபர் தேர்தல் நடத்த அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் பிரதமராக பதவியேற்ற இம்ரான் கான் தனது பிடிஐ கட்சியின் மூத்த தலைவர் ஆரிப் அல்வியை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. அவருக்கு பல்வேறு சிறிய கட்சிகள் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளன.
இந்நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் ஆண்ட கட்சிகளான நவாஸ் ஷரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி, பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைந்து அதிபர் தேர்தலி பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளன.