மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கு - பாக். முன்னாள் பிரதமர்கள் விசாரணைக்கு ஆஜர்

மும்பை நகரில் 2008-ம் ஆண்டு 175 உயிர்கள் பலியான பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்கள் நவாஸ் ஷரிப், ஷாஹித் காகான் அப்பாசி இன்று விசாரணைக்கு ஆஜராகினர். #Nawaz #Abbasi #LahoreCourt #Mumbaiattack
மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கு - பாக். முன்னாள் பிரதமர்கள் விசாரணைக்கு ஆஜர்
Published on

பாகிஸ்தான் நாட்டில் இயங்கிவரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் கடந்த 26-11-2008 முதல் 29-11-2008 வரை இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பை நகரில் தாஜ் மஹால் பேலஸ் ஹோட்டல் உள்பட 12 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தினர்.

இந்த தொடர்குண்டு வெடிப்பு தாக்குதல்களில் 166 பேர் உயிரிழந்தனர். 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல்களில் பாகிஸ்தான் நாட்டின் உளவுத்துறை மற்றும் பயங்கரவாத இயக்கங்களுக்கு உள்ள தொடர்புகள் குறித்து பாகிஸ்தான் அரசுக்கு இந்திய அரசு ஆதாரங்களை அளித்துள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது.

இந்த தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பயங்கரவாத இயக்கங்களை பற்றிய ரகசிய தகவல்களை இந்திய அரசுக்கு அளித்த வகையில் தேசத்துரோகம் இழைத்து விட்டதாக  விளைவாக லாகூர் நகரில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

‘டான்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியின்போது அரசின் ரகசிய காப்புறுதி பிரமாணத்தை மீறிய நவாஸ் ஷரிப்புக்கு ஆதரவாக பேசியதாக முன்னாள் பிரதமர் காகான் அப்பாசி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. நவாஸ் ஷரிப் அளித்த பேட்டியில் பாகிஸ்தான் உளவு அமைப்புகள் தொடர்பான ரகசியங்களை வெளியிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆமினா மாலிக் தொடர்ந்துள்ள இந்த தேசத்துரோக வழக்கு தொடர்பாக கடந்த முறை நடைபெற்ற விசாரணையில் சிரில் அல்மைடா வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், லாகூர் உயர் நீதிமன்ற நீதிபதி மஸார் அலி நக்வி தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்னர் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்டுள்ள  முன்னாள் பிரதமர்கள் நவாஸ் ஷரிப், ஷாஹித் காகான் அப்பாசி, சிரில் அல்மைடா ஆகிய மூவரும் விசாரணைக்கு ஆஜராகினர்.

அவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்த நீதிபதிகள் மறுவிசாரணையை வரும் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். #Nawaz #Abbasi #LahoreCourt #Mumbaiattack

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com