சவுதாம்ப்டன் டெஸ்டில் அபித் அலி, ரிஸ்வான் அரை சதம் - 2வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 223/9

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் அபித் அலி, ரிஸ்வான் அரை சதமடிக்க இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 9 விக்கெட்டுக்கு 223 ரன்கள் எடுத்துள்ளது.
அரைசதமடித்த ரிஸ்வான்
அரைசதமடித்த ரிஸ்வான்
Published on

சவுதாம்ப்டன்:

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ரசிகர்கள் இன்றி நடக்கும் இந்த தொடரின் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இவ்விரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷான் மசூத் மற்றும் அபித் அலி களமிறங்கினர். அபித் அலி சிறப்பாக ஆடி அரை சதமடித்தார். பாபர் அசாம் 47 ரன்னில் அவுட்டானார். மழையால் முதல் நாள் ஆட்டம் தடைபட்டது. முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் 5 விக்கெட்டு இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில், இரண்டாம் நாள் நேற்று நடைபெற்றது. விக்கெட் கீப்பர் மொகமது ரிஸ்வான் பொறுப்புடன் ஆடினார். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.

ரிஸ்வான் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் 9 விக்கெட்டுக்கு 223 ரன்கள் எடுத்துள்ளது. ரிஸ்வான் 60 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் தலா3 விக்கெட், சாம் கரன், வோக்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com