சம்பளதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி- பி.எப். வட்டி 8.65 சதவீதமாக உயர்வு

பி.எப். வட்டி விகிதம் 8.55 சதவீதத்தில் இருந்து 8.65 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 6 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் பயனடைவார்கள்.
டெல்லி பி.எப். அலுவலகம்
டெல்லி பி.எப். அலுவலகம்
Published on

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (பிஎப்) வட்டி விகிதத்தை மத்திய அறங்காவலர் வாரியம் (சிபிடி) தீர்மானிக்கிறது. அவ்வகையில் வருங்கால வைப்பு நிதிக்கு இந்த நிதியாண்டில் வழங்கப்படும் வட்டி விகிதத்தை மாற்றியமைப்பது குறித்து கடந்த பிப்ரவரி மாதம் அறங்காவலர் வாரியம் ஆலோசனை நடத்தியது.

மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் கங்வார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பிஎப் கணக்குதாரர்களின் ஆண்டு வட்டியை 8.55 சதவீதத்தில் இருந்து 8.65 சதவீதமாக உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டது.

அதன்பின்னர் சமீபத்தில் தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் கங்வார், நிதி மந்திரியை சந்தித்து, வட்டி உயர்வை அமல்படுத்தினாலும் போதுமான உபரி நிதி இருக்கும் என விளக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com