மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 1500 கன அடியாக குறைப்பு

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 1500 கன அடியாக குறைக்கப்பட்டது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 1500 கன அடியாக குறைப்பு
Published on

மேட்டூர்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

நேற்று 1,306 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 1,227 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் குடிநீர் தேவைக்காக கடந்த சில நாட்களாக 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்த தண்ணீர் திறப்பு இன்று காலை முதல் 1,500 கன அடியாக குறைக்கப்பட்டது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

நேற்று 33.69 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 33.52 அடியாக குறைந்தது. இனி வரும் நாட்களில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com