வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பு: பெண் அதிகாரிக்கு ஒரு ஆண்டு சிறை

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் பெண் அதிகாரிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பு: பெண் அதிகாரிக்கு ஒரு ஆண்டு சிறை
Published on

சென்னை:

சென்னை கிண்டியில் உள்ள அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்தில் டிரேடு மார்க் துணைப்பதிவாளராக பணியாற்றி வருபவர் கஸ்தூரி. இவர், வருமானத்துக்கு அதிகமாக 2 கோடியே 22 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக கடந்த 2011-ம் ஆண்டு சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள 14-வது சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நடராஜன், குற்றம்சாட்டப்பட்ட கஸ்தூரிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறி உள்ளார்.

மேற்கண்ட தகவல் சி.பி.ஐ. அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com