ஏரிக்கரையில் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி - கலெக்டா் ரத்னா தொடங்கி வைத்தார்

ஏரிக்கரையில் ஒரு லட்சம் பனை விதைகளை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா விதைத்து, அந்த பணியை தொடங்கி வைத்தார்.
பனை விதை
பனை விதை
Published on

அரியலூர்:

அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ராவுத்தன்பட்டி சந்தன ஏரியின் கரை பகுதிகளை சுற்றிலும் ஒரு தன்னார்வ அமைப்பினர் சார்பில் ஒரு நாள் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா பனை விதைகளை விதைத்து, அந்த பணியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், பொதுமக்கள் தங்களது கிராமங்களிலும் ஏரி, குளம், குட்டை ஆகியவற்றில் இதுபோன்ற பனை விதைகள், மரக்கன்றுகள் வளர்த்து, சுற்றுச்சூழல் பெருக பராமரித்து பேணிக்காக்க வேண்டும், என்றார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், தாசில்தார் சந்திரசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழரசன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மதிவாணன் மற்றும் தன்னார்வ அமைப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com