அணைக்காமல் விட்ட சிகரெட்டால் போதையில் இருந்த முதியவர் தீயில் கருகி பலி

திருச்சி அருகே மது போதையில் சிகரெட் தீயினால் முதியவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அணைக்காமல் விட்ட சிகரெட்டால் போதையில் இருந்த முதியவர் தீயில் கருகி பலி
Published on

மண்ணச்சநல்லூர்:

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் முரு கேசன் (வயது 68). இவர் அதே பகுதியில் இரவு டிபன் கடை நடத்தி வந்தார். இவரது மகன் சேகர். அனைவரும் ஒரே வீட் டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று அனைவரும் தீபாவளி பண் டிகையை கொண்டாடினர். பின்னர் இரவில் அவர்கள் சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கினர். அப்போது முரு கேசன் மது குடித்திருந்தார்.

அளவுக்கு அதிகமான போதையில் வீட்டின் வெளியே கிடந்த கட்டிலில் படுத்தார். முன்னதாக புகைப்பிடித்த அவர் போதையில் சிகரெட்டை அணைக்காமல் தூங்கினார்.

இதனால் சிகரெட்டின் தீ கட்டிலில் இருந்த நைலான் வயர் மீது பட்டு தீப்பிடித்தது. பின்னர் அந்த தீ முருகேசன் உடலிலும் பிடித்து எரிந்தது. மது போதையில் முருகேசன் இருந்ததால் தீயின் வெப்பம் அவருக்கு தெரிய வில்லை. இதனால் தீ தொடர்ந்து எரிந் தது.

நள்ளிரவில் கட்டிலுடன் முருகேசன் தீப்பிடித்து எரிந் ததை பார்த்த அக்கம் பக்கத் தினர் விரைந்து வந்து பாதி உடல் எரிந்த நிலையில் முரு கேசனை மீட்டு சிகிச்சைக் காக ஸ்ரீரங்கம் அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென் றனர். அங்கு அவரை பரி சோதித்த டாக்டர்கள் முரு கேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து மண்ணச்ச நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மது போதையில் சிகரெட் தீயினால் முதியவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com