சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் முதியவர் கைது

நாகப்பட்டினம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த ராதாமங்கலம் ஊராட்சி நாகவிளாகம் கிராமத்தைசேர்ந்தவர் தங்கவேல் (வயது 66). இவர் அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியை வீட்டில் யாரும் இல்லாதபோது பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது குறித்து சிறுமிதாயிடம் நடந்ததைக் கூறி அழுதுள்ளார். அதனை அடுத்து நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தாய் புகார் கொடுத்ததின் பேரில் பாலியல் வல்லுறவு செய்த தங்கவேலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com