வேலூரில் சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

வேலூரில் சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய சமூகநல அலுவலர்கள், அவர்களின் பெற்றோரை எச்சரித்தனர்.
சிறுமி திருமணம் நிறுத்தம்
சிறுமி திருமணம் நிறுத்தம்
Published on

வேலூர்:

வேலூர் மக்கான் பகுதியில் 18 வயது நிரம்பாத சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக சமூக நலத்துறை அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் சமூகநல அலுவலர்கள் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், ரேஷன் கடையில் பணிபுரியும் 30 வயது வாலிபருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமண நிச்சயம் செய்யப்பட்டதும், சில நாட்களில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததும் தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து அலுவலர்கள், சிறுமி மற்றும் வாலிபரின் பெற்றோரை அழைத்து பேசி திருமணத்தை தடுத்து நிறுத்தினர். பெண்ணிற்கு 18 வயது நிரம்பிய பின்னரே திருமணம் செய்து வைக்க வேண்டும். இதனைமீறி திருமணம் செய்து வைத்தால் அனைவரும் கைது செய்யப்படுவீர்கள் என்று அலுவலர்கள் எச்சரித்தனர். மேலும் சிறுமிக்கும், வாலிபருக்கும் திருமணம் செய்து வைக்க மாட்டோம் என்று அவர்களின் பெற்றோரிடம் எழுதி வாங்கி கொண்டனர். கொரோனா தொற்று காரணமாக சிறுமி அரசு பிற்காப்பு இல்லத்தில் ஒப்படைக்கப்படவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com