வடலூரில் இன்று ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி நிர்வாக அதிகாரி கைது

லஞ்சபணம் வாங்கிய அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் வடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கைது
கைது
Published on

மந்தாரக்குப்பம்:

கடலூர் மாவட்டம் வடலூர் பஸ்நிலையம் அருகே பேரூராட்சி அலுவலகம் உள்ளது. இங்கு நிர்வாக அதிகாரியாக சக்கரவர்த்தி (வயது 55) பணியாற்றி வருகிறார். இவரது சொந்த ஊர் வடலூர் ஆகும். இவர் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி அலுவலகத்தையும் கவனித்து வருகிறார்.

குறிஞ்சிபாடி அருகே உள்ள தானூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன்தாஸ். இவரது உறவினர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். அவர் பணத்தை மோகன்தாசுக்கு அனுப்பி வடலூர் பகுதியில் நிலங்களை வாங்கும்படி கூறியுள்ளார். அதனை தொடர்ந்து மோகன்தாஸ் 25 சென்ட் நிலத்தை(5 பிளாட்) வாங்கினார். அதில் வீடுகட்டுவதற்கு அந்த நிலத்தை மறுசீரமைப்பிற்காக வடலூர் பேரூராட்சி நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பத்திருந்தார்.

அப்போது நிர்வாக அதிகாரி சக்கரவர்த்தி ரூ.25 ஆயிரம் கொடுத்தால் தான் நிலத்தை மறுசீரமைப்பு செய்யப்படும் என்றார்.

இதை தொடர்ந்து மோகன்தாஸ் வீட்டில் இருந்து பணத்தை எடுத்துவருவதாக கூறி வெளியே சென்றார். லஞ்ச பணம் கொடுக்க விரும்பாத அவர் இதுகுறித்து கடலூர் லஞ்ச ஓழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரையின்படி மோகன்தாஸ் இன்று வடலூர் பேரூராட்சி அலுவலகத்துக்கு சென்றார். அங்கிருந்த நிர்வாக அதிகாரி சக்கரவர்த்தியிடம் ரூ.25 ஆயிரத்தை கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஓழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மெல்பின் ராஜாசிங், இன்ஸ்பெக்டர்கள் திருவேங்கடம், சண்மும், மாலா மற்றும் போலீசார் லஞ்சபணம் வாங்கிய சக்கரவர்த்தியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

அப்போது சக்கரவர்த்திக்கு திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் டாக்டரை அங்கு அழைத்து வந்தனர். அதன்பின்பு டாக்டர் சக்கரவர்த்திக்கு சிகிச்சை அளித்தார். சிகிச்சை முடிந்தும் அவரை போலீசார் கடலூருக்கு அழைத்து வந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com