ஒடிசா வெள்ளம், நிலச்சரிவில் பலியானோர் குடும்பங்களுக்கான நிதி ரூ.10 லட்சமாக உயர்வு

ஒடிசாவை தாக்கிய டிட்லி புயலின் எதிரொலியாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் பலியானோர் குடும்பங்களுக்கான நிதியை ரூ.4 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக உயர்த்தி நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். #OdishaCM #Titliexgratia #cycloneTitli #Naveenpatnaik
ஒடிசா வெள்ளம், நிலச்சரிவில் பலியானோர் குடும்பங்களுக்கான நிதி ரூ.10 லட்சமாக உயர்வு
Published on

வங்கக் கடலில் உருவான டிட்லி புயல், ஒடிசாவின் கோபால்பூருக்கும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே கடந்த 11-ம் தேதி கரையைக் கடந்தது. இதையடுத்து பலத்த காற்றுடன் ஒடிசா கடற்கரைகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
 

சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவும் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் மாநில மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com