

ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே எம்.சுப்புலாபுரம் அண்ணாநகர் காலனியை சேர்ந்தவர் செல்வக்குமார் மகள் திவ்யா (வயது19). தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பி.எஸ்.சி. நர்சிங் படித்து வருகிறார்.
சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற திவ்யா இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதானல் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் நண்பர் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தார். எங்கும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து கண்டமனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான திவ்யாவை தேடி வருகின்றனர்.