

போலி ஆவணங்கள் மூலம் 14 வங்கிகளில் ரூ.824 கோடி கடன் வாங்கி மோசடி செய்த தொழில் அதிபர் அபேஸ்குமாரின் வீடு நுங்கம்பாக்கம் கோத்தாரி சாலையில் உள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த பூபேஸ்குமார், வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டார். இதனை தொடர்ந்து இந்த வீட்டை முடக்குவதற்காக வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இன்று காலையில் ஸ்டேட் வங்கி அதிகாரிகள் 7 பேர் கோத்தாரி சாலையில் உள்ள வீட்டுக்கு சென்றனர்.
நுங்கம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நகைக் கடை அதிபரின் வீட்டில் ஸ்டேட் பாங்கி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்ட சென்ற காட்சி.