கேரள கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கு - மிரட்டிய பாதிரியாரிடம் விசாரிக்க விரையும் தனிப்படை

கேரளாவில் பாதிரியாரால் கற்பழிக்கப்பட்டதாக புகார் அளித்த கன்னியாஸ்திரியை மிரட்டி புகாரை வாபஸ் பெறும்படி வற்புறுத்திய தலைமை பாதிரியாரிடம் விசாரிக்க கேரள போலீசார் விரைந்துள்ளனர். #Kerala #NunSexualAssaultCase
கேரள கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கு - மிரட்டிய பாதிரியாரிடம் விசாரிக்க விரையும் தனிப்படை
Published on

திருவனந்தபுரம்:

கேரளாவில் பாதிரியாரால் கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த 2014 முதல் 2016-ம் ஆண்டு வரை தம்மை பாலியல் வன்புணர்வு செய்ததாக போலீசில் புகார் அளித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து போலீசார் இந்த புகாரின் மீது முறையாக விசாரணை மேற்கொள்ளவில்லை என தேசிய மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தார்.

இதையடுத்து இந்த புகார் மீதான விசாரணை கேரள போலீசாரால் முடுக்கி விடப்பட்டது. இந்த புகாருக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும், தனிப்பட்ட பகையை மனதில்கொண்டு கன்னியாஸ்திரி பெண் இந்த புகாரை அளித்துள்ளதாகவும் அந்த பாதிரியார் தரப்பில் கூறப்படுகிறது.

சமீபத்தில் அந்த கன்னியாஸ்திரிக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஜலந்தர் பகுதியின் தலைமை பாதிரியார் ஜேம்ஸ் எர்தைல், புகாரை வாபஸ் பெருமாறு மிரட்டியுள்ளார். மேலும், தனது பேச்சைக் கேட்டு புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டால், 10 ஏக்கர் நிலமும், தனி மடம் ஒன்றும் அமைத்து தருவதாக ஆசை வார்த்தை காட்டியுள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த கன்னியாஸ்திரி, பாதிரியாரின் செல்போன் உரையாடலைக் கொண்டு அவர்மீதும் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், இந்த புகார் தொடர்பாக தலைமை பாதிரியார் ஜேம்ஸ் எர்தலிடம் விசாரணை நடத்துவதற்காக டி.எஸ்.பி சுபாஷ் தலைமையிலான தனிப்படை ஜலந்தர் பகுதிக்கு விரைந்துள்ளனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளவும் போலீசார் திட்டமிட்டள்ளனர். #Kerala #NunSexualAssaultCase

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com