கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கு - ஜலந்தர் பிஷப்பை கைது செய்ய கோரி இரண்டாம் நாளாக போராட்டம்

கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், ஜலந்தர் பிஷப்பை கைது செய்யக் கோரி கிறிஸ்தவ கூட்டுக்குழு அமைப்பினை சேர்ந்தவர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.#FrancoMulakkal
கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கு - ஜலந்தர் பிஷப்பை கைது செய்ய கோரி இரண்டாம் நாளாக போராட்டம்
Published on

திருவனந்தபுரம்:

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் பிஷப்பாக இருக்கும் ஃப்ராங்கோ  மூலக்கல் என்பவர் தன்னை 2014 முதல் 2016 வரை கேரளாவில் உள்ள ஒரு கான்வெண்டில் வைத்து தனது ஒப்புதலின்றி 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார்.

அதன் பேரில் ஜலந்தர் சென்ற திருவனந்தபுரம் போலீசார், பிஷப் ஃப்ராங்கோ  மூலக்கல்லிடம் விசாரித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், ஜலந்தர் பிஷப் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் நேற்று போராட்டம் நடத்தினர். அவர்கள் திருவனந்தபுரம் நீதிமன்ற வளாகம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகள், பிஷப் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் பதாகைகளை கைகளில் ஏந்தியிருந்தனர்.

இந்நிலையில், கிறிஸ்தவ கூட்டுக்குழு அமைப்பினை சேர்ந்தவர்கள் திருவனந்தபுரம் நீதிமன்ற வளாகம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், ஜலந்தர் பிஷப் பிராங்கோ மூலக்கல்லை கைது செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனர். 

இந்த வழக்கு குறித்து டிஜிபி லோக்நாத் பெஹரா கூறுகையில், தற்போது இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்கும் முடிவு எடுக்கப்படவில்லை. இந்த வழக்கை எர்ணாகுளம் ஐ.ஜி. விஜய் சகாரே முழு விசாரணை நடத்தி விரைவில் முடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார். #FrancoMulakkal

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com