

மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் இன்று வெளியிட்ட புள்ளிவிவர அறிக்கையின்படி ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதித்ததாக வரி செலுத்தியவர்கள் (தனியார் நிறுவனங்கள் உள்பட) எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் 1.40 லட்சமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உயர்வு விகிதாச்சாரம் நிதியாண்டு 2014-15-ம் 88 ஆயிரத்து 649 பேர் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானத்துக்கு கணக்கு சமர்ப்பித்திருந்தனர். இந்த எண்ணிக்கை நிதியாண்டு 2017-18-ல் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 139 ஆக உயர்ந்துள்ளது.