இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் வேண்டுகோளை நிராகரித்தார் ஜெயவர்தனே

இலங்கை அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக விளங்கிய ஜெயவர்தனே, உலகக்கோப்பையில் பணிபுரிய வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தார்.
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் வேண்டுகோளை நிராகரித்தார் ஜெயவர்தனே
Published on

கடந்த வருடம் குமார் சங்ககரா, அரவிந்த டி சில்வா மற்றும் ஜெயவர்தனே அடங்கிய குழு இலங்கை கிரிக்கெட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல ஒரு அறிக்கை தயாரித்திருந்தது. அதில் அதிக அளவில் உள்ளூர் கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கான திட்டங்களை அளித்திருந்தனர்.

ஆனால் இலங்கை கிரிக்கெட் வாரியம் அந்த அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இதனால் ஜெயவர்தனே இலங்கை கிரிக்கெட் வாரியம் தொடர்பான விவகாரத்தில் தலையிடாமல் இருக்கிறார்.

தற்போது உலகக்கோப்பை தொடர் நடப்பதால், இலங்கை அணிக்கு உதவும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், ஜெயவர்தனே அதை மறுத்துவிட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், நான் ஏற்கனவே பல பணிகளை தேர்வு செய்து வைத்துள்ளேன். நான் எதிர்பார்த்ததை விட இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com