உத்தனப்பள்ளி அருகே வட மாநில வாலிபர் தற்கொலை- போலீஸ் விசாரணை

உத்தனப்பள்ளி அருகே 30 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். அவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உத்தனப்பள்ளி அருகே வட மாநில வாலிபர் தற்கொலை- போலீஸ் விசாரணை
Published on

வேப்பனஅள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, உத்தன பள்ளி அருகே சானமாவு வனபகுதியில் வண்ணான் ஏரி ஆழமரத்தில் 30 வயது மதிக்கதக்க ஒரு வாலிபர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதை அந்த வழியாக ஆடு மேய்க்க சென்ற கூலி தொழிலாளி பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து ஊர் மக்களிடம் அவர் கூறினார். அங்கு அவர்கள் திரண்டு வந்து உடலை பார்த்தனர். 

இந்த சம்பவம் குறித்து உத்தனபள்ளி போலீசுக்கும், வனத்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் விரைந்து வந்து அந்த வாலி பரின் உடலை மரத்தில் இருந்து இறக்கி கைப்பற்றி பார்வையிட்டனர். விசாரணையில் 30 வயது மதிக்கதக்க வாலிபர் சிகப்பு கலர் சட்டையும், கிளி பச்சை கால் சட்டையும் அணிந்து இருந்தார். அந்த வாலிபர் தூக்கில் தொங்கி சுமார் 1 மாதம் இருக்கும். இதனால் அவரது உடல் மிகவும் மோசமாக அழுகிய நிலையில் இருந்தது. அந்த வாலிபர் வட மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இறந்தவர் யார்? எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சூளகிரி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மஞ்சு விசாரணை நடத்தி வருகின்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com