18 தொகுதிகளில் இடைத்தேர்தலை தள்ளிவைக்க தேவையில்லை - உயர்நீதிமன்ற மதுரை கிளை

தமிழகத்தில் எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிகளில் இடைத்தேர்தலை தள்ளி வைக்க தேவையில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. #ByElection #HCMaduraiBench
18 தொகுதிகளில் இடைத்தேர்தலை தள்ளிவைக்க தேவையில்லை - உயர்நீதிமன்ற மதுரை கிளை
Published on

தமிழகத்தில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், இந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை தள்ளிவைக்கக்கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், 18 தொகுதிகளிலும் கடந்த முறை தேர்தல் நடத்துவதற்கு செலவான தொகையை தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 பேரிடமும் வசூலிக்க வேண்டும் என்றும், அதுவரை இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com