

பாட்னா:
பீகார் மாநிலம் பாட்னாவில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவரும், மாநில முதல் மந்திரியுமான நிதிஷ் குமார் கலந்து கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில், ராஜ்யசபா உறுப்பினரான பஷிஷ்தா நரேன் சிங்கை மாநில தலைவராக அறிவிக்கப்பட்டார்.
இந்த கூட்டத்தில் நிதிஷ் குமார் பேசுகையில், சிலர் விளம்பரத்துக்காக என்னை தாக்கிப் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்கள் அரசியலின் அடிச்சுவடியை அறியாதவர். அவர்கள் கூறிய கருத்துக்களை கேட்டு நான் சில சமயம் சிரித்து விடுவேன். அதனால் நான் காயப்படவில்லை என தெரிவித்துள்ளார்.