பேராசிரியை நிர்மலாதேவி ஜாமீன் மனு 24-ந் தேதிக்கு தள்ளிவைப்பு: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைதான பேராசிரியை நிர்மலாதேவி ஜாமீன் மனுவை 24-ந்தேதிக்கு தள்ளிவைத்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #NirmalaDevi #NirmalaDeviCase
பேராசிரியை நிர்மலாதேவி ஜாமீன் மனு 24-ந் தேதிக்கு தள்ளிவைப்பு: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
Published on

மதுரை:

கல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு அழைத்ததாக அருப்புக்கோட்டையை சேர்ந்த பேராசிரியை நிர்மலாதேவி சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினரால், கடந்த ஏப்ரல் 17-ந் தேதி கைது செய்யப்பட்டார்.

அதைத்தொடர்ந்து அதே வழக்கில் ஏப்ரல் 23-ந் தேதி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் சரண் அடைந்தனர். அவர்களும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் 3 பேரும் கைதாகி 140 நாட்களுக்கும் மேலான நிலையில் பேராசிரியை நிர்மலாதேவி, உதவி பேராசிரியர் முருகன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுக்கள் தொடர்ந்து விசாரணையில் இருந்த நிலையில் இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரனைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் வக்கீல் கால அவகாசம் கோரியதையடுத்து ஜாமீன் மனுக்கள் மீதான விசார ணையை வருகிற 24-ந் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். #NirmalaDevi #NirmalaDeviCase

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com