தொடர் உண்ணாவிரதம் இருக்கும் டெல்லி மகளிர் ஆணைய தலைவியுடன் நிர்பயாவின் தாயார் சந்திப்பு

டெல்லி ராஜ்கட் அருகே கடந்த 10 நாட்களாக தொடர் உண்ணாவிரதம் இருக்கும் டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி சுவாதி மாலிவால்-ஐ நிர்பயாவின் தாயார் இன்று சந்தித்தார்.
சுவாதி மாலிவாலுடன் நிர்பயாவின் பெற்றோர்
சுவாதி மாலிவாலுடன் நிர்பயாவின் பெற்றோர்
Published on

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் கடந்த மூன்றாம் தேதி டெல்லி ராஜ்கட் அருகே காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

அவரது போராட்டம் பத்தாவது நாளை எட்டியுள்ள நிலையில் 2012-ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பஸ்சில்கற்பழிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மருத்துவ மாணவி நிர்பயாவின் தாயாரும் தந்தையும் இன்று சுவாதி மாலிவால்-ஐ சந்தித்து உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுமாறு கண்ணீர் மல்க வலியுறுத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com