நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு- கேரளாவில் பள்ளிகள் திறப்பு தாமதம்

நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு காரணமாக கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் வருகிற 1-ந்தேதிக்கு பதில் ஜூன் 5-ந்தேதி பள்ளிகளை திறக்கும்படி கேரள பள்ளி கல்வித்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு- கேரளாவில் பள்ளிகள் திறப்பு தாமதம்
Published on

கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் உள்பட சில மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி உள்ளது. இதன் காரணமாக இதுவரை 14 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மேலும் நிபா வைரஸ் காய்ச்சல் காரணமாக அந்த மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கோழிக்கோடு, மலப்புரம் அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிறப்பு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிபா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதாக பரவும் தன்மை கொண்டதாக இருப்பதால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகளும் முக கவசம் மற்றும் விஷேச பாதுகாப்பு ஆடை அணிந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com