சிறுபான்மையின மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற சிறுபான்மையின மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா
Published on

ஊட்டி:

நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்ட இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சார்ந்தவர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெறலாம். அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் 2020-21-ம் கல்வி ஆண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயில்பவர்கள் பள்ளி படிப்பு உதவித்தொகை, 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயில்பவர்கள் மேற்படிப்பு கல்வி உதவித்தொகை, தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி பயில்பவர்கள் தகுதி, வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெறலாம். இதற்கு www.scholarships.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு வருகிற 31-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

2020-21-ம் கல்வி ஆண்டில் தமிழ்நாட்டில் மேற்கண்ட கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் 1 லட்சத்து 35 ஆயிரத்து 127 மாணவ-மாணவிகள் பயன் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கல்வி உதவித்தொகை மாணவ-மாணவிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

புதிதாக விண்ணப்பிக்கும் மாணவ-மாணவிகள் இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய குறியீட்டு எண்ணை மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இத்திட்டங்கள் தொடர்பான மத்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் http://www.minorityaffairs.gov.in/schemes என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com