

கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை என்றபோது பதற்றம் அதிக அளவில் காணப்பட்டது. ஒவ்வொருவரும் நகத்தை கடித்துக் கொண்டிருந்தனர்.
சவுமியா சர்கார் வீசிய கடைசி பந்தை தினேஷ் கார்த்திக் டீப் கவர் திசையில் சிக்ஸ் அடித்தார். இதனால் இந்திய அணி யுனிட் சந்தோசத்தில் குதித்தார். அனைவரும் பந்தை எந்த திசையில் செல்கிறது என்பதை நுணுக்கமாக பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் கடைசி பந்தை தினேஷ் கார்த்திக் சிக்சருக்கு தூக்கியதை நான் பார்க்கவில்லை என்று கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
போட்டிக்குப்பின் இதுகுறித்து கூறுகையில் ‘‘நான் தினேஷ் கார்த்திக் அடித்த கடைசி சிக்சரை நான் பார்க்கவில்லை. நான் சூப்பர் ஓவருக்கு தயாரானேன். அதனால் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த இடத்தில் இருந்து எழுந்து பேடு கட்டுவதற்காக டிரெஸ்ஸிங் அறைக்கு நடந்து கொண்டிருந்தேன்.