வீரர்களின் மோசமான நடவடிக்கைக்கு வங்காள தேச கிரிக்கெட் வாரியம் கடும் கண்டனம்

இலங்கைக்கு எதிரான கடைசி லீக்கில் வங்காள தேச வீரர்கள் நடந்து கொண்ட செயலுக்கு, அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். #SLvBAN
வீரர்களின் மோசமான நடவடிக்கைக்கு வங்காள தேச கிரிக்கெட் வாரியம் கடும் கண்டனம்
Published on

உச்சகட்டமாக வங்காள தேச வீரர்களின் டிரெஸ்ஸிங் அறையின் கண்ணாடி கதவு உடைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ஷாகிப் அல் ஹசன் மற்றும் நுருல் ஆகியோருக்கு அபாரம் விதிக்கப்பட்டது. வங்காள தேச வீரர்களின் செயல்பாடுகள் கிரிக்கெட் தொழில்முறைக்கு உகந்ததல்ல என்று வங்காள தேச கிரிக்கெட் வாரியத் தலைவர் நஸ்முல் ஹாசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து நஸ்முல் ஹாசன் கூறுகையில் ‘‘இலங்கைக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் வங்காள தேச வீரர்களின் செயல்பாடுகள் விளையாட்டின் தொழில்முறைக்கு உகந்தது அல்ல. அவர்களின் பழக்கம் ஏற்றுக்கொள்ள முடியாதது. சம்பவம் குறித்து வங்காள தேச வீரர்கள் விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com