நெய்வேலியில் ஒப்பந்த தொழிலாளர்கள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

நெய்வேலியில் போராட்டம் நடத்தி வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் 25 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #NLCProtest #WorkersSuicideAttempt
நெய்வேலியில் ஒப்பந்த தொழிலாளர்கள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
Published on

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களில் சிலரை வேறு சுரங்கத்திற்கு பணி மாற்றம் செய்ததை கண்டித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களுக்கு அதே இடத்தில் பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று சுரங்கம் 1ஏ முன்பு மறியல் செய்ய வந்தனர். அப்போது சுமார் 25 தொழிலாளர்கள் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தொழிலாளர்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com