நேபாளம்: மழை, வெள்ளம், நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 49 ஆக உயர்வு - 200 இந்தியர்கள் சிக்கித் தவிப்பு

நேபாள நாட்டில் தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 49 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில் இந்தியாவில் இருந்து சுற்றுலா சென்ற சுமார் 200 பேர் வெள்ளத்தில் சிக்கி தவிப்பதாக தெரியவந்துள்ளது.
நேபாளம்: மழை, வெள்ளம், நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 49 ஆக உயர்வு - 200 இந்தியர்கள் சிக்கித் தவிப்பு
Published on

நேபாள நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது, மழையினால் 21 மாவட்டங்கள் வெள்ளக்காடாக காணப்படுகின்றன. ரப்தி மற்றும் புதிரப்தி ஆறுகளில் வெள்ளநீர் கரை புரண்டு ஓடுகிறது. கரை கடந்து வெளியேறிய வெள்ளநீர் அரித்துச் சென்றதால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், தாழ்வான பகுதிகளில் வசித்த பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இங்குள்ள ஜாப்பா, மோராங், சன்சாரி, சப்ட்டாரி, சிராஹா, ரவுட்டாஹட், பன்க்கே, பர்டியா, டாங் ஆகிய மாவட்டங்கள் வெள்ளநீர் அதிகமாக சூழ்ந்துள்ளது. மோராங் மாவட்டத்தில் உள்ள பிராட்நகர் விமான நிலையத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இங்குள்ள சுமார் ஆயிரம் வீடுகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com