நீலாங்கரையில் பேராசிரியர் வீட்டில் 80 பவுன் நகை கொள்ளை

நீலாங்கரையில் பேராசிரியர் வீட்டில் 80 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலாங்கரையில் பேராசிரியர் வீட்டில் 80 பவுன் நகை கொள்ளை
Published on

திருவான்மியூர்:

நீலாங்கரை அருகேயுள்ள பாலவாக்கம் பல்கலை நகரில் 1-வது பிரதான சாலை 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் தங்கராஜ்(60), ஓய்வுபெற்ற அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர். இவர் தனது மகன் திருமணத்தையொட்டி உறவினர்களுக்கு பத்திரிகை கொடுக்க குடும்பத்துடன் திருச்சி சென்றிருந்தார். இந்தநிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு வேலைக்கார பெண் வீட்டுக்கு வந்தார்.

அப்போது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து வெளியூர் சென்றிருந்த பேராசிரியர் தங்கராஜுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்தார் வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு அதில் திருமணத்திற்காக வைத்திருந்த 80 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள பட்டுப் புடவையும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இவர்கள் வெளியூர் சென்றிருப்பதை அறிந்த மர்ம நபர்கள் இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. நீலாங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com