ஜார்க்கண்ட் - தலைக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சலைட் சுட்டுக் கொல்லப்பட்டான்

ஜார்க்கண்டில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் தலைக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சலைட் இன்று சுட்டுக் கொல்லப்பட்டான். #NaxalKilled
ஜார்க்கண்ட் - தலைக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சலைட் சுட்டுக் கொல்லப்பட்டான்
Published on

ராஞ்சி:

ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் உள்ளூர் போலீசாரும், மாநில போலீசாரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் டலா டா என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரிட இருந்த ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய டலா டா தலைக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது.

நக்சலைட்களின் நடமாட்டத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. #NaxalKilled

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com